திருமணத்திற்கு மறுத்த காதலனை காவல்நிலையத்தில் கரம் பிடித்த கல்லூரி மாணவி!!

 
அசீனா

கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுநகரில் வசித்து வருபவர்  வசந்தகுமார் மகள் அசீனா.இவருக்கு பெற்றோர்கள் கிடையாது. இதனையடுத்து  பாட்டி மாலா  வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில்  பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தென்னரசுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களிருவரும்  கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்து தங்கள்  காதலை உரமிட்டு வளர்த்து வந்தனர். தென்னரசு பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

பள்ளி காதல்


இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அசீனா கேட்டுள்ளார். ஆனால் தென்னரசு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் .  பலமுறை அசீனா வற்புறுத்தி கேட்டு தென்னரசு எந்த பதிலும் சொல்லவில்லை.   இதன் பிறகு   அசீனா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில்  போலீஸார், தென்னரசு மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!


 தற்போது  தென்னரசு, அசீனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பண்ருட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில்  தென்னரசு, அசீனாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.  இரு தரப்பு உறவினர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திருமணத்துக்கு மறுத்த காதலனை மாணவி போராடி கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web