கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து... ஒரு தலைக்காதலால் விபரீதம்!!
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவருக்கு வயது 16. இவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வரும்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக மாணவியை கத்தியால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அவன் தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞர் கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தது தெரியவந்தது.
இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் வசந்த் தனது காதலை ஏற்குமாறு மாணவியை வற்புறுத்தினார். காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தலை, கை, காலில் சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. தப்பிச்சென்ற வசந்த்தை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...