பரபரப்பு... கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. ஒருவர் படுகாயம்!
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது நேரு கல்வி நிறுவனம். செப்டம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை நேற்று இந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அதே கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படிக்கும் அணாஸ் என்ற மாணவர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டதாகக் கூறப்படுகிறது. சக கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி முடித்து விட்டு அனாஸ் பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார்.
அப்போது ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவரை சக கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் அனாஸ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சக மாணவர் தாக்கப்பட்ட தகவலை அறிந்த மற்ற மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடையே அசம்பாவிதத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கல்லூரி கலை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பிரச்சினைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியே வந்து கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் குவிந்து வரும் கல்லூரி மானவர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் படுகாயம் அடைந்த மாணவர் அனாசுக்கு சிறப்பு உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்தனர். இந்த பிரச்சனை குறித்து அனாசிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...