காவல் நிலையத்தில் கதறிய கள்ளக்காதல் ஜோடி... விஷம் குடித்துவிட்டு காப்பாற்ற சொல்லி போராட்டம்... கடைசியில் உயிரிழந்த சோகம்!

 
கள்ளக்காதல்

இரு குடும்பத்தினரும் தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க மாட்டார்கள் என்று கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், பின்பு காப்பாற்றச் சொல்லி காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்குள் சென்ற கள்ளக்காதல் ஜோடி காப்பாற்றுங்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி (28), கார் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கள்ளக்காதல்

கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கவேல்சாமி தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.அப்போது எதிர்வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் சுப்பையா என்பவரின் மனைவி பார்வதியுடன் (33) பழக்கம் ஏற்பட்டது. சுப்பையா-பார்வதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த இருவரது குடும்பத்தினரும் கண்டித்தனர்.

இந்நிலையில் பார்வதி வீட்டிலிருந்து வெளியேறி தங்கவேல்சாமியுடன் சென்றார். எனவே, அவர்களை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் தங்கவேல்சாமி குலசேகரன்பட்டினத்துக்கு காரில் பார்வதியை அழைத்து சென்றார். ‘வீட்டுக்கு திரும்ப சென்றால் குடும்பத்தினர் பிரித்து விடுவார்கள்’ என்று கருதிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்கள். அதன்படி தங்கவேல்சாமி, பார்வதி ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அதன் பின்னர் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடியபடி வாழும் ஆசையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு காரில் சென்றனர். காவல் நிலையத்துக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, இருவரும், ‘நாங்கள் விஷம் குடித்து விட்டோம், எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியவாறு காவல் நிலையத்துக்குள் நுழைந்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அவர்களை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கவேல்சாமி, பார்வதி ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?