இருசக்கர வாகனத்தில் கார் மோதி தம்பதி பலி... உறவினர்கள் பெரும் சோகம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்படாபாளையம், கொண்டையன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். 70 வயதான இவரின் மனைவி 65 வயது ராஜம்மாள். இருவரும் நேற்று பிப்ரவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து இருந்து இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
பட்லூர் நால் ரோடு இடத்திற்கு அருகே வந்தபோது பின்னால் வந்த காரும், இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியது. இந்த திடீர் மோதலால் இருசக்கர வாகனத்தில் இருந்த தம்பதியர் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜம்மாள் உயிரிழந்தார்.
ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி இருவருமே ஒன்றாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!