பிரபல நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை, ஆமை!!
தமிழ் திரையுலகில் பழம் பெரும் நடிகர் பாலையா. இவரின் பேரன் பாலாஜிதங்கவேல் தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தில் வசித்து வருகிறார். நீச்சல் குளத்துடன் அமைந்துள்ள இவரது வீட்டில் குளத்தை சுத்தப்படுத்த பணியாளர்களை வரச்சொல்லியிருந்தார்.
அப்போது, நீச்சல் குளத்தின் உள்ளே ஒன்றரை அடி நீளத்தில் முதலை ஒன்றும், ஒரு ஆமை குட்டியும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற வனத்துறையினர் நீச்சல் குளத்தில் இருந்த முதலையையும், ஆமை குட்டியையும் பிடித்து சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். இந்நிலையில் நீச்சல் குளத்தில் முதலையும், ஆமையும் எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!