நடுவானில் அம்மாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!!
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் தாய் எனும் சொந்தமே உறவுகளை இட்டு நிரப்பக்கூடியது. தாயின் அருமைகளை உணராமல் பலர் கேட்பாரின்றி கிடக்கும் இந்த காலத்திலும் தாயை பெருமைப்படுத்தும் மகன்களும் இருந்து வருகின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் மணிகண்டன்.
இந்நிலையில் தாய் கண்ணம்மாளின் 50வது பிறந்த நாளில் அவருக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இதன்படி தாயைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் கண்ணம்மாள் மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீரில் மகனைக் கட்டி தழுவினார்.
விமானத்தில் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பு தாயை கேக் வெட்டச் சொன்னார். அவரது 50வது பிறந்தநாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார். விமானத்திலிருந்த அனைவரும் கண்ணம்மாளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் மணிகண்டனுக்குப் பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!