பகீர்... சிலிண்டர் வெடித்து கணவன் மனைவி பலி!!
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் குப்பதஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் கிரிஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் மதுசூதன் என்பவருக்கு சொந்தமான வாடகை பண்ணை வீட்டில் குடியிருந்து வந்தனர்.செப்டம்பர் 16ம் தேதி சமையல் செய்யும்போது திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் கிரிஷ் மற்றும் நந்தினி பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
விக்டோரியா மருத்துவமனையில் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் காபி போடும்போது, சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...