பகீர்.. நடனமாடிய பெண் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
நடனமாடிய பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது...
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கல்வாலா கிராமத்தில் மகர சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்த கிராம பெண்கள் நடனமாடினர். அப்போது ராஜாமணி என்ற 40 வயது பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கராந்தியின் போது கோலாட்டம் ஆடிய பெண் மாரடைப்பால் மயங்கி விழுந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!