உயிருக்கு ஆபத்தான டிரைவிங்... நடிகர் சுரேஷ் கோபி புகாரால் தமிழக ஓட்டுநர் கேரளாவில் கைது!

 
சுரேஷ் கோபி

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் கொல்லம் சுதி விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள், நடிகைகள் உள்பட திரைத்துறையினர் பலரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் இறுதிச் சடங்கில் நடிகர் சுரேஷ் கோபி பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்வு முடிந்தபிறகு நேற்று அதிகாலை வீடு திரும்பி கொண்டிருக்கையில், அவரின் காருக்கு இடையூறு செய்யும் வகையில் தமிழக வாகனம் ஒன்று சென்றதாக கூறப்படுகிறது. 

சுரேஷ் கோபி

கொச்சி அருகே சென்றுக் கொண்டிருக்கும் போது நடிகர் சுரேஷ் கோபியின் காரை முந்தவிடாமல் வழிமறுத்த ஓட்டுநர் பரத், தனது லாரியை ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓட்டியாக சொல்லப்படுகிறது. பல முறை முயற்சித்தும் அவரால் லாரியை முந்திச்செல்ல முடியவில்லை. இதையடுத்து காரில் இருந்தபடியே, காவல்துறையில் சுரேஷ் கோபி புகார் தெரிவித்தார்.

பின்னர், அங்கமாலி அருகே லாரியை தடுத்து நிறுத்திய கேரள போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

சுரேஷ் கோபி

அப்போது அவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரத் என்பவர் என்பது தெரியவந்தது. பின்னர் ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டியதாக, டிரைவர் பரத்தை கைது செய்ததுடன், லாரியையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, டிரைவர் பரத் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ள கேரள போலீசார், அவர்மீது வழக்கு பதிந்து கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web