12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடையும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 16ம தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் தொடரும் கனமழை: பல மாவட்டங்களில் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று தமிழகத்தில், சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்தது. வானிலை மையம் கூறியதாவது, இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளை கடக்கும் எனவும், அதனால் புயலாக மாறும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ஆந்திரா மாநிலம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, புதுவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை. இங்கு லேசானது முதல் மிக கனமழை, சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
