பெரும் சோகம்... சமயபுரம் கோவிலில் பக்தர் மயங்கி சரிந்து உயிரிழப்பு... !

 
சமயபுரம்

சமீபகாலமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடந்து செல்லும் போது மயங்கி சரிந்து மரணம், நடனம் ஆடும் போது மரணம், திருமண மேடையில் மரணம் என திடீர் மாரடைப்புக்களும், இளம் வயது உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. திருச்சியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோவில்.  சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம்தினமும் அலைமோதும்.  இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும் பல்வேறு வகைகளில் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  

ஆம்புலன்ஸ்

ஆந்திராவில் 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள  பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று விட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர். அப்போது விஜயவாடா,  ராணிகாரு கோட்டையில் வசித்து வரும்  வெங்கடா கொண்டா ரெட்டிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சரிந்து கீழே  விழுந்தார்.  அவரை உடனடியாக மாரியம்மன் கோவில் முதலுதவி சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  வெங்கடகொண்டாரெட்டி மாரடைப்பால்  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சமயபுரம் திருச்சி

இதனை அடுத்து கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் முதலுதவி சிகிச்சை மையம் மருத்துவர், சமயபுரம் காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த   தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  கோவில் நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உயிரிழந்தவர்  உடலுக்கு மாலை மரியாதையுடன்  ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web