தோனியின் ”சிக்சர்” இருக்கைகள் ஏலம்..!!

அக்டோபர் 5 ம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் நவம்பர் 10ம் தேதிவரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 2011 உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இறுதி போட்டியில் தல தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் சென்று விழுந்தது.
இந்த 2 இருக்கைகளை ஏலம் விட போவதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!