நடிகையை அடித்து வெளுத்த இயக்குநர் பாலா... ஷூட்டிங்கில் இருந்து ஓட்டமெடுத்த நடிகை... பரபரப்பு புகார்!

 
மமிதா வணங்கான்

’வணங்கான்’ படத்தின் ஷூட்டிங்கில் தன்னை இயக்குநர் பாலா அடித்ததாகவும்,  அதனால், அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்காமல், தான் விலகியதாகவும் நடிகை மமிதா இயக்குநர் பாலா குறித்து பேட்டியளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


‘வணங்கான்’ படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான நிலையில், இந்தக் கதை தனக்கு ஒத்துவராது எனச் சொல்லி நடிகர் சூர்யா விலகினார். படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கு பிரச்சினை என்று தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து சூர்யா- பாலா தரப்பில் எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை.

சூர்யா விலகிய பிறகு அந்தக் கதையில் நடிகர் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ‘பிதாமகன்’ விக்ரம் போல இந்த டீசர் முழுக்க அருண் விஜய் பேசாமல் இருந்தார். சூர்யாவைப் போலவே இந்தப் படத்தில் முன்பு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த கீர்த்தி ஷெட்டியும் தேதி பிரச்சினைகள் காரணமாக விலகினார். இப்போது அந்தப் படத்தில் இருந்து விலகிய மற்றொரு நடிகையான மமிதா, தான் படத்தில் இருந்து விலகியதற்கான காரணமாக பேசியிருக்கும் சமீபத்தியப் பேட்டி வைரலாகி வருகிறது.

வணங்கான்

படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் நடிக்கும் போது மூன்று டேக் வாங்கியிருக்கிறார் மமிதா. இதனால், டென்ஷனான இயக்குநர் பாலா, கோபத்தில் மமிதாவை அடித்திருக்கிறார். இது குறித்து மமிதா, தனது பேட்டியில் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் ரசிகர்கள், ‘பாலா இன்னும் மாறவே இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web