பாரதிராஜாவின் குருநாதர் காலமானார்... திரையுலகில் சோகம்...!!

 
சங்கரன்

தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரது குருநாதர் ரா. சங்கரன். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 92.   அவருக்கு  ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’  உட்பட  ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.


 


 

‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களையும் அவர் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இயக்குநர் பாரதிராஜா சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சங்கரன்

 


இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்   ’ எனப் பதிவிட்டுள்ளார்.  இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை பதிவிட்டு  வருகின்றனர். இவரது  மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web