தீபாவளி கொண்டாட்டம்... புதுரக பட்டாசுகள் விற்பனை படுஜோர்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் புதுரக பட்டாசு விற்பனை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் பேரியம் நைட்ரேட் தடை, சரவெடி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடைகள் உள்ளிட்ட பல நெருக்கடிகள் இருந்தபோதிலும், தீபாவளி பண்டிகைக்காக உற்பத்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து கடைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் புதுரக பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

பட்டாசு விற்பனையாளர் கனகராஜ் கூறுகையில், "இந்த ஆண்டு பீட்சா, வாட்டர் மெலன், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில், குழந்தைகளுக்காக கடாயுதம், வேல், கிட்டார், சிலிண்டர் போன்ற 30க்கும் மேற்பட்ட புதுரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, பென்சில் வெடிகள் துப்பாக்கி வடிவில் குழந்தைகளை கவரும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு சில ஆலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

பட்டாசு வாங்கிய மணிகண்டன் கூறுகையில், "உற்பத்தி குறைவால் விலை கடந்த ஆண்டை விட 10%–20% அதிகரித்துள்ளது. அதே சமயம், ஆன்லைன் மற்றும் சில கடைகளில் தள்ளுபடி மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விற்பனையாளர்கள் இதுபோன்ற தள்ளுபடி மோசடிகளை தவிர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
