நாய்களுக்கு உணவு வழங்கும் இயந்திரம்.. பேடிஎம் நிறுவனருக்கு குவியும் பாராட்டு!

 
 விஜய் சேகர் சர்மா

பிளாஸ்டிக் பாட்டிலில் உணவு வழங்கும் இயந்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள், பல்வேறு பொருட்களை வழங்கும் விற்பனை இயந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளன. இதேபோல், துருக்கியின் இஸ்தான்புல்லில் பல இடங்களில் நாய் உணவு வழங்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்தால், மறுபுறம், நாய் உணவும் தண்ணீரும் சிறிதளவு வழங்கப்படும். இதனால் சுற்றுச்சூழலில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியால் வாடும் தெருநாய்களுக்கு உணவும் கிடைக்கும். விலங்குகள் நல ஆர்வலர் என்ஜின் கிர்கின் இஸ்தான்புல்லில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா இந்த தனித்துவமான யோசனையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் தனது பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதியளிக்க விரும்புகிறேன்" என்று எழுதினார். அவரது ஆதரவை வரவேற்று பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web