சென்னை முழுவதும் 444 லாரிகள் மூலம் குடிநீர்... !!

 
சென்னைக் குடிநீர்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை வெளுத்துவாங்கியது.  மாநில அரசு  தேசிய பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்  நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் மழை நீர் தேங்கிஉள்ளன. மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தொற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது.

சென்னைக் குடிநீர்

இந்நிலையில் சென்னை மக்களுக்கு லாரிகள் மூலம் இலவசமாக குடிநீர் சப்ளை நேற்று முதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து  சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ லாரிகள் மூலம் குடிநீர் பெற பொதுமக்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்.1916 மற்றும் 044-4567 4567 (20 இணைப்புகள்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னைக் குடிநீர்

அதன்படி 
சென்னையில் நேற்று 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் சீராக வழங்கப்பட்டுள்ளது.  74 நிவாரண முகாம்களுக்கு தேவையான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.லாரிகள் மூலம்  குடிநீரை பெற  கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web