மக்களவை தேர்தல் இலட்சினை வெளியிட்ட எடப்பாடி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தலைவர்கள் பலரும் நினைவஞ்சலி , சூளுரை, லட்சினை வெளியீடு என பல உறுதி மொழிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் , "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என சூளுரை எடுத்து மக்கள் நலன் காக்கவே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தாய், சிங்கநிகர் தலைவி, இதயதெய்வம் அம்மா அவர்களின் 76வது பிறந்தநாள் இந்த நாளில் கழகத் தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவியின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை முழக்கத்தினை வெளியிட்டுள்ளேன்.
அதன்படி "தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!!" என்ற லட்சினை வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தமிழகத்தின் உரிமைகள் குறித்து மக்களவையில் உரத்த குரலில் முழங்கப்பட வேண்டும். அதனை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து கழக கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள், தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கொள்கைக் கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு, #தமிழர் உரிமை மீட்ட_அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம்" என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!