பட்டியலினத்து பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்.. வீடியோ வைரலானதால் மாமியார், மருமகள் கைது..!

 
தருமபுரி பட்டியல் பெண்கள்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டியை அடுத்த போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சார்ந்த பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவரது விவசாய நிலத்தில் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது வேலை செய்த அந்த பெண்களுக்கு தோட்ட உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்தனர்.

மேலும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் வெள்ளி டம்ளரில் தேநீர் வழங்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட செல்லி (50) என்ற பெண் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், டீ கொடுத்த மருமகள் தரணி மற்றும் அவரது மாமியார் சின்னதாய் ஆகியோரிடம் காம்பை நல்லூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.மேலும் விசாரணைக்குப் பிறகு, தரணி, சின்னத்தாய் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டம் 2015-ன் கீழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web