பத்திரமா இருங்க மக்களே... கொட்டித்தீர்த்த கனமழை... நீலகிரியில் அவசர உதவி அழைப்பு எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் உதவி, மீட்பு பணிகளுக்காக அவசர அழைப்பு எண்களை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் மழையில் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, மரம் சரிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் போக்குவரத்தும் தடைபட்டது. நேற்று வரை கொட்டித்திருத்த கனமழை இன்று சற்று குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அவசர உதவிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி
நீலகிரி ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை – 1077.
உதகை கோட்டம் : 0423 – 244 5577.
குன்னூர் கோட்டம் : 0423 – 2206002.
கூடலூர் கோட்டம் : 0426 – 261295.
உதகை வட்டம் : 0423 – 2442433.
குன்னூர் வட்டம் : 0423 – 2206102.
கூடலூர் வட்டம் : 0426 – 261252.
பந்தலூர் வட்டம் : 0426 – 220734.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா