கர்நாடகாவில் வேலைவாய்ப்பு கன்னடர்களுக்கு மட்டுமே... முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 
சித்தாராமையா

 கர்நாடகா மாநிலத்தில்  புதிய அமைச்சரவை கூட்டத்தில் புதிய அதிரடி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதன்படி கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கள் கன்னடர்களுக்கே என்ற மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில்  செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள C,D கிரேடு பணிகளில் உள்ள பணியிடங்களை கன்னடர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இம்மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

சித்தாராமையா


இந்த மசோதா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ” கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலையின்மையை குறைக்கும் நோக்கிலும் புதிய மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் உள்ள சி,டி கிரேடு பணிகளில் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக பணியில் அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

கர்நாடகாவில் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை குறைத்து கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்கள் அரசின் முன்னுரிமை என அம்மாநில முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.  சி கிரேடு வேலை என்பது கிளார்க், அலுவலக உதவியாளர், தட்டச்சாளர், டெலிபோன் ஆப்பரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற பணிகளும்,  டி கிரேடு வேலை என்பது சமையல் பணியாளர், காவல் பணியாளர் (வாட்ச்மேன்), தோட்ட பணியாளர், தூய்மை பணியாளர் போன்ற உடல் உழைப்பு சம்பந்தமான பணிகள்” என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web