கல்யாணமாகி 22 நாள் தான் ஆச்சு.. 80 சவரன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயம்!!

 
ஆர்த்தி

மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும்   ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம்   சென்னகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஆர்த்திக்கும் செப்டம்பர்  9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு 3500 பேருக்கு பிரியாணி 80 சவரன் நகை போட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது . புதுமணத் தம்பதியர் இருவரும் ஒன்றாக 22 நாட்கள் வாழ்ந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் திரும்பவே இல்லை.  

5வது திருமணம்

அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. வீட்டில் பார்த்த போது நகைகளும் காணாமல் போகவே, 80 சவரன் நகைகளுடன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புதுமணமகன்.  காணாமல் போன புதுமணப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது  தற்போது தெரியவந்துள்ளது.

ஆர்த்தி

ஆகாசின் செல்போன் எண்ணும் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண் வீட்டார் மூலம் தெரிய வந்துள்ளது. திருமணம் ஆகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் மணப்பெண் நகைகளுடன் மாயமானது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் ஆகியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web