அதிபர் மகனா இருந்தாலும் மன்னிப்பு கிடையாது... வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன். இவர் 2018ல் கைத்துப்பாக்கி வாங்கிய போது, போதைபொருள் பயன்பாடு குறித்து பொய் கூறினார் என குற்றச்சாட்டு எழுந்தது. போதையின் பாதிப்பில் இருந்தபோது, அவர் துப்பாக்கி வாங்கி குண்டு நிரப்பப்படாத துப்பாக்கியை 11 நாட்கள் வரை ஹன்டர் தன்வசம் வைத்திருந்தார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஹன்டர் மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். இந்த குற்றச்சாட்டுகளை ஹன்டரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர், தன்னுடைய மகனை பாதுகாப்பதற்காக, அதிபர் பைடன் பதவியை தவறாக பயன்படுத்தி விட்டார் என கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டில் ஹன்டர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தன்னுடைய மகனின் தண்டனையை பைடன் குறைத்து விடுவாரா? என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் “ இந்த கேள்விக்கு முன்பே 2 வாரங்களுக்கு முன்பே நான் பதில் அளித்து உள்ளேன். அதில் இல்லை என்று உறுதியாக தெரிவித்து இருந்தேன் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. இதனால், வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துப்பாக்கி வைத்துக் கொண்டு திரிகின்றனர். உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அவ்வப்போது பொதுமக்களில் பலர் பலியாகி வருகின்றனர். இதற்கு பைடன் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதனால், கடுமையான சட்டம் இயற்றும் முயற்சியும் அதற்கான பரிசீலணைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் ஹன்டர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!