சிவகாசி அருகே பட்டாசு கடையில் திடீர் வெடி விபத்து!
சிவகாசி அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென நேற்று வெடி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனையும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோனம்பட்டியில் தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் நேற்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பனை செய்து கொடிருந்தனர்.

அப்போது திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனைக் கண்ட பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் சென்றனர். இதனையடுத்து பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பட்டாசு கடையில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுங்கள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
