இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கால நோய்கள் வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக வரும் காய்ச்சல் , சளி, இருமல் போன்ற நோய்களுடன் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோயும் கூடுதலாக சென்னையில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும், சுகாதாரத்துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. சென்னையில் பரவும் கண்வலி தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ தமிழகத்தில் வெகுவிரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . ஆகஸ்ட் மாதத்தில் எழும்பூர் மருத்துவமனையில் 240 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் போதும் .மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. கண் நோய் சரியாகும் வரை அனைவரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும். கண்ணுக்கு மருந்து போடுகிறவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு ஆகியவை மிக விரைவில் குணமடைய வைக்கும்.
அனைவருக்கும் பரவி விடுகிறது. கண்வலி ஏற்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது. “என கேட்டுக்கொண்டார். மேலும், வரும் செப்டம்பர் 16 முதல் 25ம் தேதி வரையில் 10 நாட்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!