பகீர்... 4 குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்! போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!

 
பெர்னாடின் அமெரிக்கா

அமெரிக்காவில் மிசூரி மாகாணத்தில், தனது 4 குழந்தைகளுடன் சேர்ந்து, தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசூரியைச் சேர்ந்தவர் பெர்னாடின்(39). கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றும் பெர்னாடின், தனது 4 குழந்தைகளுடன் வீட்டில் தீக்குளித்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கல்வி சேவைக்காக பெர்னாடின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணையில் தற்கொலை சம்பவம் என்றும், ஆசிரியர் பெர்னாடின் தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் முடிவுக்கு வந்தனர். 

USA

இது குறித்து மேலும் விசாரணை நடத்திய போலீசாரிடம் பெர்னாடின் எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தமது நான்கு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு அவர் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி தனது 4 மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பெர்னாடின், தமது பிள்ளைகளின் தாயாராக இருப்பதே ஒருவகை ஆசீர்வாதம் தான் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2017-ல் டேவிட் என்பவருடன் பெர்னாடின் விவாகரத்து பெற்றிருந்த போது, இருவரும் இணைந்தே பிள்ளைகளை வளர்க்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் வேறு பகுதிக்கு குடியிருப்பை மாற்ற டேவிட் மறுத்துள்ளதை அடுத்து, இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்தது.

அமெரிக்கா போலீஸ்

அடுத்தடுத்து விவகாரத்து பிரச்சனைகள், நீதிமன்ற வழக்கு அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்றே உறவினர்கள் கருத்து தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web