பகீர்... பெற்றோர்களே உஷார்... 6 மாதங்களாக ஏரியா சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னையில் அதிர்ச்சி!

 
யோவான்

பெற்றோர்களே... உஷாராக இருங்க.. காலம் ரொம்பவே கெட்டு போய் கிடக்கு. பக்கத்து வீடு, எதிர் வீடு, வாட்ச்மேன் துவங்கி நெருங்கிய உறவினராகவோ, நண்பர்களோவோ இருந்தாலும் கூட உங்கள் குழந்தைகளை தனியா யாருடனும் பழக விடாதீர்கள். குறிப்பாக உங்கள் பெண் குழந்தைகளின் மீது ஒரு பார்வை வைத்திருங்க. சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரை போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ந்து போனார்கள்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் பெற்றோர், அடித்துப் பிடித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதறியபடி நேற்று முன் தினம் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், “தங்களது 7 வயது மகள் தினமும் அவளது தோழிகளுடன் வீட்டுக்கு வெளியே விளையாடி வருவாள் என்றும், கடந்த ஜனவரி 30ம் தேதி அழுது கொண்டே வீடு திரும்பினாள் என்றும் கூறினார்கள். அழுது கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, ​​4ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிலர் சாக்லேட் தருவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு 30 வயதுடைய நபர் ஒருவர் தனது மகளுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 30 வயதுடைய சந்தேக நபர், 7 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளுக்கு பல மாதங்களாக சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளிடம் இது குறித்து வெளியே சொன்னாலோ அல்லது அடுத்தமுறை அழைக்கும் போது வரவில்லை என்றாலோ உன் அப்பா அம்மாவை கொலை செய்து விடுவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

‘சாக்லேட் அங்கிள்' அழைப்பதாக சிறுவன் கூறியதுமே சிறுமி பயந்து அலறி துடித்திருக்கிறாள். அப்போது சிறுமியின் தந்தை, சிறுமி பதறுவது குறித்து விசாரித்த போது தான், சிறுமியின் நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிய வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனக்கும் இது போல் நடந்து வருவதாக மற்ற சிறுமி தெரிவித்ததையடுத்து, சிறுமிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, 3 சிறுமிகள் மற்றும் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், மூன்று சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபர், “அந்த மர்ம நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இங்கு வரும் போதெல்லாம் நிறைய சாக்லேட் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சில முறை நடந்து சென்ற மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் மற்றும் சிறுவனின் அனைத்து விசாரணைகளும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்க 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 சிறுமிகள் மட்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா? அல்லது அந்த மர்மநபர் மற்ற சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தாரா? நீலாங்கரை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். 

இந்நிலையில், அந்த நபர் திருவான்மியூர் அருகே திரிந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து குற்றவாளியை இன்று கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான் (30) எனும் கயவன், தாய், தந்தையை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவதும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் கைதான யோவான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயத்தில் வெளியே சொல்லாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் யோவானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web