பிரபல நடிகர் திடீர் மறைவு.. திரையுலகில் அதிர்ச்சி... !!

 
சுமிந்த

இலங்கை திரையுலகில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் சுமிந்த சிறிசேன. இவர்  பழம்பெரும் நாடகக் கலைஞர்களில் ஒருவர் . இவர் தொடக்கத்தில்  ரயில்வேயில் பணியாளராக வாழ்கையைத் தொடங்கியவர். இதன்பிறகு  வெளிநாடுகளில் பணிபுரிந்த பின்னர்   பல்வேறு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.  அவர் நடித்த ’ரங்க சில்ப சாலிக’ என்ற நாடகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.  

சுமிந்த

இதனைத்தொடர்ந்து  பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தலைகாட்டத் தொடங்கினார்.  சுமிந்த பல பெருமைமிகு விருதுகளை வென்றவர். குறிப்பாக   தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள், இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.   2022ல்  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

சுமிந்த

அடுத்தடுத்து  உடல்நலக்குறைபாட்டால் தொடர்  சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   அவரது மறைவிற்கு  திரைப்பிரபலங்கள் மற்றும் திரைப்படத் துறையினர் , ரசிகர்கள், நண்பர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web