பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
அபர்ணா

கேரளாவில் பிரபல நடிகை  அபர்ணா. இவருக்கு வயது 33. இவர்   கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில்   அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர்.  அபர்னாவுக்கு திருமணமாகி   2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தின் கரமனாவில்   உள்ள தனது வீட்டில் நடிகை அபர்னா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தற்கொலை

வீட்டில் நடிகை அபர்னாவின் தாயார் மற்றும் சகோதரி இருந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அபர்ணா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரின் தாயார் மயங்கி விழுந்தார்.

போலீஸ்

அபர்ணாவை  மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அபர்னாவை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை அபர்னாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அபர்னா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web