பிரபல திரைப்பட பாடலாசிரியர் மரணம்... திரையுலகினர் அஞ்சலி!
பிரபல பாலிவுட் திரைப்பட பாடலாசிரியர் தேவ் கோலி வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.
தேவ் கோலி 1942ம் ஆண்டு ராவல்பிண்டியில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தேவ் கோலியின் குடும்பத்தினர் இந்தியாவுக்கு வந்து விட்டனர். இங்கு கலைத்துறையில் தேவ் கோலி முக்கிய ஆளுமையாக திகழ்ந்து வந்தார்.
மைனே ப்யார் கியா, முசாஃபிர், டாக்ஸி எண் 9211 உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். தேவ் கோலி கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
உடல் நலக்குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேவ் கோலி, நேற்று அதிகாலை மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்கு இன்று ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் நடைபெறவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேவ் கோலியின் மறைவு கலைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!