பரபரப்பு... கபடி வீரர் உடலை துண்டு துண்டாக்கி வாசலில் எரிந்த கொடூரம்!!

 
ஹர்தீப்

பஞ்சாப் மாநிலத்தில்  கடந்த சில மாதங்களாகவே விரும்பத்தகாத வன்முறை செயல்கள், போராட்டங்கள், கலவரங்கள் என பற்றி எரிகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  போதைப் பொருள் கடத்தல் மற்றும் உபயோகம், கனடா  போன்ற வெளிநாடுகளில் மறைந்திருக்கும் கேங்ஸ்டர்களால் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படும் கேங் வார், காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் புதிய எழுச்சி  சட்டம் ஒழுங்கும் சவாலாகவே இருந்து வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  பஞ்சாப் மாநிலத்தின் பிரபல கபடி வீரர் ஹர்தீப்.


 

இவர் கபுர்தலா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தில்  கபடி வீரரின் உடலை துண்டு துண்டாக்கி அவர் வீட்டின் முன்பாக கொலையாளிகள் எறிந்துள்ளனர்.  வழக்கமான களேபரங்களுக்கு மத்தியில் பிரபல  கபடி வீரர் கொடூரமாக கொல்லப்பட்டதும், அவரது சடலம் துண்டு துண்டுகளாக்கி வீட்டின் முன்பாக எறியப்பட்டதும்   ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.  

பகவந்த்மான்

இதற்கு விளக்கமும் நியாயமும் வழங்கக்கோரி முக்கிய எதிர்க்கட்சியான  சிரோமணி அகாலி தளம்  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கியுள்ளது.  பஞ்சாபில் ’காட்டாட்சி’ நடப்பதாகவும், முதல்வர் பகவந்த் மான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.  இத்தனை சர்ச்சைகள், கண்டனங்கள் எழுந்த பின்பும் இதுவரை கபடி வீரர் கொலையான வழக்கில்  யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்  எதிர்க்கட்சிகள் உச்சக்கட்ட ஆவேசத்திலும், மக்கள் பீதியிலும் உள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web