காஞ்சிபுரத்தில் தலையைத் துண்டித்து பிரபல ரவுடி படுகொலை... கொலையாளிகளை மடக்கிப் பிடித்த போலீசார்!

 
அஜீத்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகே பிரபல ரவுடியின் தலையைத் துண்டித்து, கொடூரமாக கொலைச் செய்து விட்டு, காரில் தப்பிச் சென்ற 2 பேரை விக்கிரவாண்டி டோல்கேட்டில் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெண்குடி பகுதியில் வசித்து வருபவர் அஜித். பிரபல ரவுடியான அஜித் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, கொள்ளை வழக்குகள் உள்ளன.

அஜீத்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்த அஜித், வாலாஜாபாத்  செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்தார். அங்கு கட்டிலில் ஹாயாக அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர், திரும்பி வந்து அஜீத்தை நீ யார் எனக் கேட்டார்.  அவரிடம் அஜித் தகராறு செய்தார். வீட்டின் உரிமையாளர், கதவுகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு போலீசில் புகார் அளித்தார்.  அஜீத் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

இதுபோன்று சிறுசிறு குற்ற வழக்குகளில் அவ்வப்போது சிறைக்கு சென்று வந்தார். தொடர்ந்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் நாளுக்கு நாள் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார் அஜித்.

ஆம்புலன்ஸ்

அந்த நேரத்தில் ஒரு கார், அவர் முன்பு வந்து நின்று அவரை காரில் அலாக்காக தூக்கி போட்டு கடத்தி சென்றது. பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அஜித்தை சரமாரியாக அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி கொலைச் செய்தது. பின்னர் அஜித்தின் கழுத்தை அறுத்து, கோயில் வாசலில் தலையை வீசி விட்டு மர்ம கும்பல் தப்பியது.

இந்நிலையில், நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே வாலாஜாபாத் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அஜித்தின் தலை மற்றும் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அஜித் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது சிறையில் இருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக  தீர்த்துக் கட்டப்பட்டாரா என்பன உட்பட  பல்வேறு கோணங்களில் தனிப்படை  போலீசார்  தீவிரவிசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளிகளையும் பிடிப்பதற்காக வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரபல ரவுடி அஜித்தின் தலையைத் துண்டித்து, கொடூரமாக கொலைச் செய்து விட்டு, காரில் தப்பிச் சென்ற 2 பேரை விக்கிரவாண்டி டோல்கேட்டில் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web