நள்ளிரவைக் கடந்தும் 4வது சுற்று பேச்சுவார்த்தை... 21ம் தேதி முதல் போராட்டத்தைத் தொடர்வதாய் விவசாயிகள் அறிவிப்பு!

 
விவசாயிகள் போராட்டம்

 

நேற்று விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 4வது கட்ட பேச்சுவார்த்தை நள்ளிரவைக் கடந்தும் நீடித்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் 21ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.



வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை , எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் டெல்லியை நோக்கிப் பேரணி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். 
பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியான அம்பாலா மாவட்டம், ஷம்பு பகுதியில் விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, மத்திய அரசுடன் 3 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று 4வது கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டனர். இதில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மானும் பங்கேற்றார்.

ஹரியானா விவசாயிகள்
இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, “அடுத்த 2 நாள்களில் அரசு எங்களிடம் தெரிவித்த முன்மொழிவு குறித்து விவாதிப்போம். டெல்லிக்கு திரும்பிய பிறகு எங்களது மற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். எந்த தீர்வும் ஏற்படாவிட்டால் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் 'டெல்லி சலோ' பேரணியை தொடருவோம்" என்றார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web