பயங்கரம்... மகள் கண் எதிரே தந்தை கழுத்தை அறுத்து கொலை!!

 
கிரேசி

சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் 6வது பிளாக்கில் வசித்து வருபவர்  பிரசன்னா. இவருக்கு வயது 38. இவருடைய மனைவி  கிரேசி . இவர்களுக்கு ஒரு மகள்.  இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால்  கிரேசி கணவர் மீது புகார் அளிக்க வேண்டி காவல் நிலையத்திற்கு செல்வதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பிரசன்னா போதையில் தூங்க சென்றார். அவரது மகள் கீழ்தளத்தில் விளையாடி கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த இருவர் அம்மாவை விசாரித்தனர்.  

கிரேசி

அம்மா போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் அளிக்க சென்றுள்ளதாகவும், அப்பா தூங்கி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள்  இருவரும் வீட்டிற்குள் புகுந்து  தூங்கி கொண்டிருந்த பிரசன்னாவை கழுத்து அறுத்து கொலை செய்தனர்.  விளையாடிவிட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது  தந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே தாய்க்கு போன் செய்தார்.  ஓடி வந்த கிரேசி வீட்டில் கணவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதைப் பார்த்து உடனே  காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து   வந்த போலீஸார் பிரசன்னா உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீஸ்


விசாரணையில், பிரசன்னாவுக்கு  டூமிங் குப்பம் பகுதியில் வசித்து வரும்   சசிரேகாவுடன்   தகாத உறவில் இருந்து வந்தது.  இவர்களது விவகாரம் சசிரேகாவின் கணவர் டோமினிக்கிற்கு தெரிய வந்து, பலமுறை பிரசன்னாவை கண்டித்துள்ளார்.  இதனால் டோமினிக்குக்கும், பிரசன்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த டோம்னிக் தனது நண்பருடன் சென்று தனியாக தூங்கிக் கொண்டிருந்த பிரசன்னாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் என  விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web