பெண் பைனான்சியர் காரோடு எரித்து கொலை!! பரபரப்பு வாக்குமூலம்!!

 
நாகஜோதி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்  மாருதி   கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த   தொழிலாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள்  கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. 
 காரின் பின்புற டிக்கியில் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவரது உடலில் வெள்ளி கொடியும், கழுத்தில் தங்க சங்கிலியும் எரிந்த நிலையில் உள்ளது. சம்பவ இடத்தின் அருகே ஒரு செல்போனும் கிடந்தது.  

நாகஜோதி

காரின் நம்பர் மற்றும் செல்போனை கொண்டு விசாரணை நடத்தியதில் எரிந்து கிடந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் வசித்து வரும் நாகஜோதி   என்பது தெரியவந்தது. நாகஜோதி பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும், நேற்று அவரது ஓட்டுநருடன் காரில் சென்ற நிலையில் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து நாகஜோதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நாகஜோதிக்கும், அவரது கார் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜுக்கும்  ரூ.2 லட்சம் கொடுக்கல் வாங்கல்  தகராறு இருந்து வந்தது.  இதில் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் மைக்கேல்ராஜ், நாகஜோதியை நைசாக பேசி காரில் அழைத்து வந்துள்ளார். 

போலீஸ்
 பின்னர் விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதிக்கு வந்த போது அங்கு மற்றொரு காரில் தயாராக இருந்த ஓட்டுநரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகஜோதியிடம் ரூ.50 லட்சம் தராவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.  ஆனால் நாகஜோதி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.   இந்த ஆத்திரத்தில் ஓட்டுநர் மைக்கேல்ராஜ் தனது கூட்டாளிகளான கன்னிராஜபுரம் பகுதியில் வசித்து வரும்   மாரி என்ற மைக்கேல்ராஜ், கணபதி(28). கனி (25) ஆகியோருடன் சேர்ந்து நாகஜோதியை அடித்து கொலை செய்தனர். 
காரின் பின்புற டிக்கியில் நாகஜோதி உடலை வைத்து காரை தீ வைத்து எரித்ததும்  தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  போலீசார் ஓட்டுநர் மைக்கேல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான மாரி, கணபதி, கனி  என  4 பேரை மடக்கிப்பிடித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web