உடல் எடை ஒரே வாரத்தில் குறைய அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!!
இன்றைய இளம் பிள்ளைகள் பாஸ்ட் புட் கலாச்சாரத்தில் கிடைத்ததை சாப்பிட்டு ஒபிசியாக இருக்கிறார்கள் தேவையான சத்துக்கள், ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை. பலர் ரத்தசோகையுடனே திரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அமிர்தமாகவும், அருமருந்தாகவும் இருப்பது அத்திப்பழம் தான். அத்திப் பழத்தில் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும். உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இரத்த உற்பத்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வளர்ச்சியையும் தரும்.
அத்திப்பழத்தை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இருமடங்கு நன்மைகளைப் பெறலாம். து அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்: பல்வேறு ஆய்வுகளில் அத்திப்பழத்தில் உள் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழ நீரை குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், அத்திப்பழ நீரைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அத்திப்பழ நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும், மாதவிடாய் கால பிரச்சனைகளைத் தடுக்கவும் பெண்கள் அத்திப்பழ நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. உடலின் நச்சுக்களை அகற்றுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிவிட்டாலே உடல் ஆரோக்கியமாகவும், சருமம் அழகாகவும் இருக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...