உடல் கருகி உயிருக்குப் போராட்டம்... ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்தவரால் பரபரப்பு!
மின்சார ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்த நபர், உடல் கருகி உயிருக்கு போராடி ரயிலின் மேற்கூரையிலேயே பரிதவித்து கொண்டிருந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையை அடுத்த திவா ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் ஏ.சி. மின்சார ரெயில் ஒன்று பிளாட்பாரம் நம்பர் 1- வந்து நின்றது. அப்போது ரயிலின் மேற்கூரையில் ஒருவர் அமர்ந்தபடி பயணம் செய்திருந்தார். ரெயில் நிலையம் வந்த பின்னர் அவர் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது கால் இடறியதில் அவர் மீது உயர் மின்அழுத்த மின் கம்பி உரசியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவரது ஆடை மீதும் தீப்பற்றியதில் பலத்த தீக்காயமடைந்த அவர் உடல் கருகினார். இதனை கண்ட பயணிகள் அலறினார்கள்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். உடல் கருகி உயிருக்கு போராடிய நபர் மின்சார ரெயில் மேற்கூரையிலேயே பரிதவித்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கல்வா சிவாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
