ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து... பெரும் பரபரப்பு!

 
வேலூர்

வேலூர், காட்பாடி அருகே உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து நடந்தது. இந்த தீ வேகமாக பரவி, கட்டடத்தின் முதல் மாடி முழுவதும் தீக்கிரையாகியது.

கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வந்த ப்ளே ஸ்கூல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக விரைந்து பாதுகாப்பாக குழந்தைகளை வெளியேற்றினர். இதனால் எந்தவொரு மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக இல்லை.

விஷவாயு கசிவு பஞ்சாப் தீயணைப்பு துறை மீட்பு பணி

காட்பாடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினர் தீ விபத்தின் காரணங்கள் மற்றும் கட்டட பாதுகாப்பு உள்கட்டமைப்புகள், மின்சாதன பராமரிப்பு ஆகியவற்றை விசாரணைக்கு எடுத்துள்ளனர். பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதும் விசாரிக்கப்படும்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

காட்பாடி துணைக் கண்காணிப்பாளர் பழனி கூறியதாவது, பள்ளி ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கையுடன் குழந்தைகளை வெளியேற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அதிகாரி கூறியதாவது, பொதுமக்கள் அவசரநிலையில் விழிப்புடன் இருக்க வேண்டியதும், உடனடி தகவல் வழங்க வேண்டும் என்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?