அதிர்ச்சி வீடியோ... ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து... 44 பேர் உடல் கருகி பலி.. பலர் கவலைக்கிடம்!

 
தீவிபத்து

வங்கதேசத்தில், தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 26 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 44 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். 22 பேர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் வணிக வளாகங்கள், பிரியாணி உணவகங்கள், மற்றும் குடியிருப்புகள் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வங்கதேசத்தின் புகழ்பெற்ற கச்சிபாய் உணவகத்தில் இருந்து தீப்பிடித்து பரவியதாக தெரிய வந்துள்ளது. இந்த தீ உடனடியாக மளமகளவென கட்டிடத்தில் இருந்த மற்ற உணவகங்கள், காட்டன் ஆடை கடைகள், செல்போன் கடைகளுக்கும் பரவியது. ஏழு மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில், மளமளவென தீ ஏழு மாடிகளுக்கும் பரவியது.


 


இரவு நேரம் என்பதால் அதே கட்டிடத்தின் குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், நெருப்பு சூழ்ந்ததை அவர்களால் அறிய முடியவில்லை. வேகமாக பரவிய நெருப்பு மற்றும் புகைக்குள் அங்கு குடியிருந்தவர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர். தீ பரவியதும் அவர்களால் கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்கும் போராட்டத்தில் சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு அணைத்தனர். கட்டிடத்தில் உள்ளே சிக்கியிருந்த பலரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டும்,  தீயில் கருகியும்  பெண்கள் குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி தீ விபத்து

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பில் வசித்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை வளாகங்களில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச சுகாதார அமைச்சர் சமந்தா லால் மற்றும் அரசு அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web