சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து.. போராடி தீயை அணைத்த கடலோர காவல்படையினர்!

 
 சரக்கு கப்பல்

குஜாத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு சரக்கு கப்பல் ஒன்று நேற்று புறப்பட்டது. சரக்கு கப்பல் கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையின் மும்பை பிரிவு போலீசார் சரக்கு கப்பலுக்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலோர காவல்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானமும் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web