ரூ.25 கோடி முதல் பரிசு... பெயிண்ட் கடை ஊழியருக்கு லாட்டரியில் ஜாக்பாட் பரிசு!
லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு பெற்ற பெயிண்ட் கடை ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிடுச்சு என்று சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் எனும் இளைஞர் பெயிண்ட் கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தொடர்ந்து அவ்வப்போது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்த சரத் நாயர், கடந்த ஓணம் சிறப்பு லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரு1.கோடி, மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பலருக்கு ரூ5 லட்சம், ரூ2 லட்சம் மற்றும் பல தொகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது. பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களாக இருந்ததால் லாட்டரி சீட்டுகளை பலர் போட்டிபோட்டு வாங்கினர். இதனால் ஓணம் பண்டிகை பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் 70 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின.

இந்நிலையில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் சரத் வாங்கிய TH577825 என்ற லாட்டரி சீட்டின் எண்ணிற்கு முதல் பரிசு விழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
