ரூ.4,965 கோடி மதிப்பில் தண்ணீருக்கடியில் முதல் மெட்ரோ சேவை தொடக்கம்... இது எப்படி சாத்தியமாச்சு?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாட்டிலேயே முதன் முறையாக நீருக்குள்ளே இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியிலான மெட்ரோ ரயில் பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு ரூ.4,965 கோடி ரூபாய் மதிப்பில், 4.8 கிலோ மீட்டர் நீளத்தில், இந்த மெட்ரோ ரயில் வழித்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் ஹூக்ளி ஆற்றின் அடியில் 45 வினாடிகளில் பாதையை கடந்து செல்லும்.
இந்த நிலையில், இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அதில் பயணம் செய்தும் மகிழ்ந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!