முதல் திருமணநாள்... மகன்களின் முகத்தை காட்டிய நயன்தாரா!
நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் சினிமா திரையுலகின் முக்கிய பிரபலங்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என குறைவான நபர்களே கலந்து கொண்டனர்.
திருமணம், ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது இந்த நட்சத்திர தம்பதி. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைக்கு தாயானார் நயன்தாரா.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும் கூறினர். இது சில சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பின்னர் அவர்களை அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக நயன்தாரா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதனை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கொண்டாடிவருகிறது.
மேலும் நயன்தாரா, தன் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அவரது பதில், என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே. 1 வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது! நிறைய ஏற்ற தாழ்வுகள் எதிர்பாராத பின்னடைவுகள்! சோதனை நேரங்கள்! ஆனால் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது மிகுந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிறது மற்றும் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது!
என் உயிரோடும் உலகத்தோடும் அனைத்தையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டுநாம் அடைய விரும்பும் கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. குடும்பம் கொடுக்கும் பலம் எல்லாற்றையும் மாற்றுகிறது! சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம், என்று பதிவிட்டுள்ளார். தற்போது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?