இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.. கடலுக்குள் செல்லாமல் புறக்கணிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவா் கூட்டமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவா்கள் 74போ் கைது செய்யப்பட்டனா். 8 விசைப்படகுகள், நான்கு நாட்டுப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது.
இந்நிலையில். ஏற்கெனவே சிறைத் தண்டணை பெற்று இலங்கை சிறையில் உள்ள 6 மீனவா்களையும், 2018 முதல் 2024 வரை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்த தமிழக மீனவா்களின் 170 படகுகளையும் விடுவிக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல் மத்திய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 15 விசைப் படகுகளை மீட்க அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக அரசு சாலை வரியை நீக்கி 1,800 லிட்டா் டீசல் வழங்குவது போல மத்திய அரசும் வழங்க வேண்டும். பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் இன்று கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா