காவிரி ஆற்றில் கரை புரண்ட மக்கள் வெள்ளம்...அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் !

 
தர்ப்பணம்

திருச்சி மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளுக்கு பஞ்சம் இல்லை காவிரி, கொள்ளிடம் அம்மாமண்டபம் அய்யாளம்மன் படிதுறை முசிறி ,தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆகியவற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயா அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று தை அம்மாவாசை என்பதால் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் முன்னிலையில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு தேங்காய், பழம்,மளிகை சாமான்,ஆகியவற்றை வைத்து என்னுடன் தண்ணீர் வார்த்து திதி கொடுத்து, பிண்டம் வைத்து ,தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அமாவாசை பித்ரு தர்ப்பணம்
இவ்வாறு செய்வதால் இறந்து போன தங்களது முன்னோர்கள் தங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தை அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர் இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் மாம்பழச்சாலை முதல் அம்மாமண்டபம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது இருப்பினும் போக்குவரத்து காவலர்கள் ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web