இன்று முதல் ட்ரோன்கள் பறக்க தடை!! அதிரடி உத்தரவு!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி, நாகை, திருவாரூர் பகுதிகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று தர்மபுரி பவளவிழாவில் கலந்துகொள்கிறார். நாளை நாகை மாவட்டத்தில் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஆகஸ்ட் 26 ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
திருவாரூரில் ஆகஸ்ட் 27 ம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முதல்வரின் 4 நாள் வருகை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்ல இருக்கிறார். இதன் அடிப்படையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் ஆகஸ்ட் 27ம் தேதிகளில் தடையை மீறினால் ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!