முன்னாள் வனத்துறை அமைச்சர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!!

 
விஸ்வநாதன்

 காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின்  முன்னாள் வனத்துறை அமைச்சருமான கே.பி.விஸ்வநாதன் காலமானார்.  இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. இவருக்கு வயது 83. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 

இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக அவர்  திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று டிசம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் , பிரபலங்கள்  பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வநாதன்


விஸ்வநாதன் 1977, 1980 மற்றும் 1987ல் நடைபெற்ற    சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.   1991-1994 மற்றும் 2004-2005ல்   வனவிலங்கு அமைச்சராக பணிபுரிந்தவர்.   அதன் பிறகு 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கொடகரா தொகுதியில்  தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு விஸ்வநாதன்   தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web