காரும், லாரியும் மோதியதில் அதிமுக மாஜி எம்.எல்.ஏ. பலி.. மனைவி கவலைக்கிடம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
விபத்து

மீஞ்சூர் பகுதியில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில்  அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்துள்ளார்.  அவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   சென்னையை அடுத்த  மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் உள்ள சீமாவரம் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் தனது மனைவியோடு காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது கார் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதனால் துடிதுடித்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே  மாஜி எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்தார். விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா படுகாயம் அடைந்தார்.

விபத்து

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு  அருகில் இருந்த   மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து  அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. E. ரவிக்குமாரும் அவருடைய மனைவியும்   காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில், திரு. ரவிக்குமார்  பலியானார்.   திருமதி நிர்மலா  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டு   மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்; 

ஆம்புலன்ஸ்
 கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும்  பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் மீண்டும்  வலியுறுத்தி வருகிறேன். இது போன்ற சம்பவங்கள்   நடைபெற்று  கழக உடன்பிறப்புகள் உயிரிழக்கும் சம்பவம் மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. இனிவரும் காலங்களில், கழக உடன்பிறப்புகள் தங்கள் பயணங்களை மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மேற்கொள்ள வேண்டும் என அன்புக் கட்டளையிடுகிறேன்.  கழகத்திற்கு விசுவாசமாக பணிபுரிந்து வந்த  அன்புச் சகோதரர் திரு. ரவிக்குமாரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது  ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அன்புச் சகோதரி திருமதி நிர்மலா  விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என  எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இபிஎஸ்  தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web