லாரி மீது ஆட்டோ மோதி கோர விபத்து.. 4 பேர் பலி.. 5 பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், ஹைதராபாத்தில் தனக்கு கிடைத்த வேலைக்காக தொழிலாளர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம், பிதார் மாவட்டத்தில் உள்ள பல்கி தாலுகா லாமணி தாண்டா கிராமம் அருகே இன்று காலை இந்த லோடு ஆட்டோ வந்தது. அப்போது எதிரே வந்த கரும்பு ஏற்றி வந்த லாரி மீது ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ಲಾರಿ ಹಾಗೂ ಅಶೋಕ್ ಲೇಲ್ಯಾಂಡ್ ಪಿಕ್ಅಪ್ ಮುಖಾಮುಖಿ | News Karnataka#lorry #pickup #accident #bidar #death #newskarnataka pic.twitter.com/9qURlA5R7I
— News Karnataka (@Newskarnataka) February 28, 2024
அவர்களில் தஸ்தகீர் தவல்சாப் (36), ரஷிதா ஷேக் (41), டிரைவர் வாலி (31), அமம் ஷேக் (51) ஆகியோர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பிதார் காவல் கண்காணிப்பாளர் சென்னபசவ லங்கோடி தெரிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்த தொழிலாளர்கள் பிடார் மருத்துவ அறிவியல் கழக (பிம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!